ஈரோடு, டிச.13: தனி மனித ஒழுக்கம் இல்லாவிட்டால் அனைத்தும் பாழாகிவிடும் என ஈரோட்டில் நடந்த பாரதி விழாவில் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் பேசினார்.மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஈரோட்டில் பாரதி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு பாரதி விழா ஈரோடு திண்டலில் நடந்தது. விழாவிற்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் உருவப் படத்தை பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் மதிவாணன் திறந்து வைத்தார்.