பேரூராட்சி ஊழியரை மிரட்டியவர் மீது வழக்கு

நாங்குநேரி.   டிச. 13:  களக்காட்டைச் சேர்ந்தவர் மதியழகன்(53). இவர், மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் சுகாதாரப்   பணியாளராக பணியாற்றி வருகிறார். அதிகாரிகளின் உத்தரவுப்படி   அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளில் சொத்து வரி வசூலிப்பது வழக்கம்.இந்நிலையில் அரசனார்குளத்தை சேர்ந்த சுப்பையா மகன் ராமச்சந்திரன் என்பவர் இரு ஆதார் அட்டை நகல்களை கொண்டு வந்து மதியழகனிடம் கொடுத்து அதிலுள்ள   முகவரியில் இருக்கும் வீட்டுக்கு தீர்வை ரசீது போட்டு தருமாறு கேட்டுள்ளார.   அதற்கு வீடு தொடர்பான வேறு ஆவணங்களின்றி தர முடியாது என மதியழகன்   மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மதியழகனை ராமச்சந்திரன் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். அங்கிருந்த சக ஊழியர் மரிய தங்கராஜ் இருவரையும் சமாதானப்படுத்தினார். இதுகுறித்த   புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி எஸ்ஐ துரை, ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: