×

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

கடையம், டிச. 13: பொட்டல்புதூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுல்தான் மகன் ஆரிப் (28). இவர், வெளிநாட்டில் டிரைவர்  வேலை பார்த்து வந்தார். ஓராண்டுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். நேற்று மதியம் இவர், நண்பர்களுடன் கடனா நதி அணையில் இருந்து உபரி தண்ணீர் மறுகால் விழுந்து செல்லும் பகுதியில் குளிக்கச் சென்றார். அப்போது ஆரிப் சுழல் பகுதியில் சிக்கி மூச்சுத்திணறியதாக கூறப்படுகிறது. அவரை மீட்ட நண்பர்கள் முதலுதவி அளித்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆரிப்பை பரிசோதித்த டாக்டரக்ள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : river ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...