ஆவுடையானூர் பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

பாவூர்சத்திரம், டிச. 13:  பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல் நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் தலைமை வகித்தார். சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு, இயற்கை விவசாயி பெலிக்ஸ் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 3000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய பசுமைப்படை அணியினர் செய்திருந்தனர்.

Related Stories: