ஆலங்குளம், டிச. 13: ஆலங்குளம் அருகே உள்ள ஆலடி அருணா செவிலியர் கல்லூரியின் 6 வது பட்டமளிப்பு விழா மற்றும் 11 வது ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மேரி வயலா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரித் தலைவர் டாக்டர் பாலாஜி தலைமை வகித்தார். பாரத் ஸ்கேன்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் இம்மானுவேல் 63 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டிப் பேசினார். இணை விரிவுரையாளர் நிஷா வில்சன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். துணை பேராசிரியை அருணா நன்றி கூறினார்.
தொடர்ந்து நடந்த ஆண்டு விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பல்கலை அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு கல்லூரித் தலைவர் பாலாஜி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சிகளில் மாணவர்கள், பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.