×

ரூ.2 கோடி செலவில் சுரண்டையிலிருந்து வாடியூருக்கு புதிய சாலை

சுரண்டை, டிச.13: சுரண்டையிலிருந்து வாடியூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்தது. எனவே புதிய சாலை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் சுரண்டை பேரூராட்சி 2019-2020ம் ஆண்டின் மூலதன மானிய நிதியில் இருந்து தடுப்பு சுவர் கட்டி, ரோட்டை அகலப்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகளை தென்காசி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி அபுல் கலாம் ஆசாத், சுரண்டை நகர அதிமுக செயலாளர் சக்திவேல், அரசு ஒப்பந்ததாரர் கரையாளனூர் சண்முகவேல், ஒன்றிய அதிமுக செயலாளர் அமல்ராஜ், ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினர் ரமேஷ், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி, முருகேசன், தேமுதிக நிர்வாகிகள் கருப்பு நிலா கணேசன், சந்திரன், சமத்துவ மக்கள் கட்சி ராமர் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி பிரமுகர்கள், பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : road ,Vadiyur ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...