தொழிலாளி மீது தாக்குதல்

நாங்குநேரி, டிச. 13: மூன்றடைப்பு அடுத்த மருதகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(36).  தச்சு தொழிலாளியான இவர், தனது நண்பர் சமுத்திரபாண்டியுடன் அருகிலுள்ள  பனையன்குளத்திற்கு சென்றுள்ளார். அங்கு தெருவோரம் நின்று ஒருவரை  ஒருவர் கேலி செய்து பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது அந்த வழியாக வந்த இதே  ஊரைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் ஆறுமுகப்பெருமாள் (33) என்பவர் இருவரும்  தன்னை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு தகராறில்  ஈடுபட்டுள்ளார். மேலும் மாரியப்பன் கன்னத்தில் ஆறுமுகப்பெருமாள் அறைந்தார். அப்பகுதியில் நின்றிருந்தவர்கள், அவர்களை சமாதானப்படுத்தினர்.இச்சம்பவம் குறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில், மூன்றடைப்பு எஸ்ஐ பார்த்திபன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: