கோவில்பட்டி, டிச. 13: கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா நடந்தது.
கல்லூரித் தலைவர் பழனிசெல்வம் தலைமை வகித்தார். கல்லூரி பொருளாளர் மகேஷ், கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஆங்கிலத்துறைப் பேராசிரியர் கற்குவேல்ராஜா வரவேற்றார். இதைத் தொடர்ந்து விழா சிறப்புமலரை நடிகர் டெல்லிகணேஷ் வெளியிட, முதல் பிரதியை கல்லூரிச் செயலாளர் கண்ணன் பெற்றுக்கொண்டார். பாரதமேரி, கலையரசி, விஜயலட்சுமி பாரதியாரின் கவிதைகள் வாசித்தனர். உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கச் செயலாளர் உதயம்ராம், தமிழ்த் துறைப் பேராசிரியர் ராஜபிரியங்கா, வக்கீல் ஜெய கிறிஸ்டோபர், மாணவர்கள் வெங்கடேஷ், முருகலட்சுமி கருத்துரையாற்றினர்.
உதயம்ராம், நெல்லை விஞ்ஞானி முத்து, இலக்கிய உலா ரவீந்தர், சிவானந்தம், உறவின்முறை பள்ளிகளின் முதல்வர்கள், உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழா நிகழ்ச்சிகளை தமிழ்த்துறைத் தலைவர் சந்திரசேகர் தொகுத்து வழங்கினார். உதவிப் பேராசிரியர் செல்வம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முத்தமிழ் மன்றம், கோவில்பட்டி இலக்கிய உலா அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.
இதே போல் கோவில்பட்டி புனித ஓம் கல்வியியல் கல்லூரியில் தாளாளர் லட்சுமணப்பெருமாள் தலைமையில் நடந்த விழாவில், பாரதி படத்திற்கு பேராசிரியர்களும், மாணவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி நடத்தப்பட்ட பாரதியாரின் கவிதை ஒப்புவித்தல், கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.