தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தினகரன் கல்விமலர்

தூத்துக்குடி, டிச. 13: தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தினகரன் அறிவொளி திட்டத்தின் கீழ் பாரதி அரிமா சங்கம் சார்பில் கல்வி மலர் புத்தகம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி ரெங்கநாதபுரம் சி.எம். மேல் நிலைப்பள்ளியில் 10, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தினகரன் நாளிதழின் அறிவொளி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பாரதி அரிமா சங்கம் சார்பில் கல்விமலர் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாரதி அரிமா சங்கத் தலைவர் சகாயராஜ், செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், வசீகரன், பொருளாளர் டேவிட் மற்றும் நிர்வாகிகள் சோமநாதன், பற்குணம் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கல்விமலர் புத்தகங்களை வழங்கினர். இதில் தலைமையாசிரியை வள்ளியம்மாள், தாளாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: