தச்சமொழி கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

சாத்தான்குளம், டிச. 13: தச்சமொழி முத்துமாரியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சாத்தான்குளம்   தச்சமொழி முத்துமாரியம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு  வழிபாடு நடந்தது. இதையயொட்டி முத்துமாரியம்மன்,  முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.  பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் அம்பாள் எழுந்தருளினார். இதை  திரளானோர் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் விழா  கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories: