தூத்துக்குடி, டிச. 13: தூத்துக்குடியில் அமரர் ஊர்தி மீது பெட்ரோல் குண்டு வீசிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி சந்தை ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த அமரர் ஊர்தி கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கல்வீசி தாக்கப்பட்டதோடு, பெட்ரோல் குண்டும் வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் போலீசார் நடத்திய விசாரணையில், கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்த பிரபு (39), சோட்டையன் தோப்பு, காமராஜ் நகரைச் சேர்ந்த பெத்துராஜ் (25), முத்தம்மாள் காலனியை சேர்ந்த ரத்தினகணேஷ் (25) ஆகிய 3 பேரும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். இதில் ரத்தினகணேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.