ஓட்டப்பிடாரம், டிச. 13: ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக நேற்று நடந்த வேட்பு மனுத்தாக்கலை பார்வையிட்டு ஆய்வுசெய்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக டிச. 27ம் தேதி 7 ஒன்றியங்களுக்கும், 2வது கட்டமாக 30ம் தேதி 5 ஒன்றியங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் பணியாற்ற மொத்தம் 14,500 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கு டிச. 15, 21 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்பு நடக்கிறது. தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக 3வது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும்.
அன்றைய நாளில் தேர்தலுக்குரிய பொருட்கள் வழங்கப்பட்டு வாக்குச்சாவடி பணியிடம் குறித்தும் தெரிவிக்கப்படும். வாக்குப்பெட்டிகள் மற்றும் தேர்தலுக்கான பொருட்கள் என அனைத்து தயார் நிலையில் உள்ளன.