புதுச்சேரி, டிச. 13: புதுச்சேரி மாநிலத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறையால் வறுமைக் கோட்டுக்கு உள்ள சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் அரசு வழங்க நடவடிக்கை எடுத்தது.
இதனிடையே ஏழைகளுக்கு மட்டுமே அரிசி வழங்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். அதன்படி மஞ்சள் நிற அட்டைக்கு அரிசிக்கு பதிலாக பணமும், சிவப்பு நிற அட்டைக்கு அரிசியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கான அரிசி சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் மாதத்துக்கான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்டது.