×

விபத்தில் வாலிபர் பலி

பண்ருட்டி, டிச. 13: பண்ருட்டி வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் நாராயணன் (32). இவரது தந்தைக்கு நேற்று முன்தினம் திவசம் என்பதால் அந்த சடங்குகளை முடித்துவிட்டு பொருட்கள் வாங்க சைக்கிளில் கடைக்கு சென்றார். பண்ருட்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு சாலையோரத்தில் சைக்கிளுடன் நின்றபடி செல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கான்கிரீட் மிக்சர் மிஷினை டிரைவர் ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதில் அந்த இயந்திரம் நாராயணன் மீது மோதியது. இதனை தொடர்ந்து பின் சக்கரம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...