×

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்

திட்டக்குடி, டிச. 13: திட்டக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்
புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. திட்டக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான உமாராணி, நீதிமன்ற குற்றவியல் நடுவர் தாமரைஇளங்கோ ஆகியோர் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கினர்.

சார்பு நீதிமன்ற நீதிபதி உமாராணி பொதுமக்களிடம் பேசுகையில், நிலுவையில் உள்ள தங்களது வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் எதிர் தரப்பினருடன் சமரச பேச்சு வார்த்தையின் மூலம் சுமூகமாக முடித்து கொள்ள தீர்வு காணலாம். மேலும் மக்கள் நீதிமன்றம் குறித்து திட்டக்குடி சட்டப்பணிகள் குழுவை அணுகி பயன்பெறலாம், என்றார்.  இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், சட்டப்பணிகள் குழு இளநிலை உதவியாளர் ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : public ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...