×

தம்பியை தாக்கிய அண்ணன் கைது

புவனகிரி, டிச. 13:  புதுச்சத்திரம் அருகே உள்ள வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன்கள் அன்பழகன்(45), ராஜமாணிக்கம் (47). சகோதரர்கள் இருவருக்குமிடையே இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இதுதொடர்பாக இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த ராஜமாணிக்கம் அருகில்இருந்த மண்வெட்டியை எடுத்து தனது தம்பி அன்பழகனை தலையில் தாக்கியுள்ளார். மேலும் அவரது மனைவி சாவித்திரியையும் தாக்கியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அன்பழகன், புதுச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து தம்பியை தாக்கிய அண்ணன் ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : brother ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...