ஆட்டையாம்பட்டி, டிச.12: சேலம்-கோவை செல்லும் பைபாஸ் சாலையில், அரியானூர் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 6 மாதத்திற்கு முன், 45 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணியை முதல்வர் துவக்கி வைத்தார். இந்நிலையில், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, திருச்செங்கோட்டில் இருந்து சேலம் செல்லும் வாகனங்களை போக்குவரத்துக்காக மாற்றியமைத்து மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலப்பணியால், அரியானூரில் இருந்து சேலம் செல்ல 1 கி.மீ தூரம் சென்று திரும்பி வரவேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.