×

தொழிலாளியிடம் நகை பறித்த வாலிபர் கைது

சேலம், டிச.12:சேலம் அருகேயுள்ள இளம்பிள்ளையை சேர்ந்தவர் ராஜகோபால் (52). கூலி தொழிலாளியான இவர்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்சங்கம் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே வந்த வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, ராஜகோபாலிடம் இருந்த  1 பவுன் தங்க மோதிரத்தை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜகோபால், அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டவர், சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த பிரகாஷ் (27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்