ராசிபுரம், டிச.12: பாரதியாரின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில், ரோட்டரி கிளப் ஆப் ராயல் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் ராயல் தலைவர் டாக்டர் இளஞ்செழியன் தலைமை வகித்தார். திட்டசேர்மன் ராஜூ முன்னிலை வகித்தார். முகாமில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். இதேபோல் ராசிபுரத்தில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் இயக்க நிர்வாகிகள் பலர் ரத்ததானம் வழங்கினர். இதில் ரோட்டரி கிளப் ஆப் ராயல் நிர்வாகிகள், துணைத்திட்ட சேர்மன் அருள்பாபு, ரவிக்குமார், சங்க சாசன தலைவர் அசோக்குமார், பொருளாளர் ராமலிங்கம், செயலாளர் பூபாலன், அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் நாகபுஷ்ப ராணி, உதவி மருத்துவ அலுவலர் கலைச்செல்வி, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு: பாரதியார் பிறந்தநாளையொட்டி திருச்செங்கோடு செங்குன்றம் தமிழ்ச்சங்கம் சார்பில், அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடமனிந்து கவிதை படித்தனர். நிகழ்ச்சியில் வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேலு, கிரிவல நலச்சங்க தலைவர் பொன். கோவிந்தராசு, லாரி சங்க தலைவர் பாரி கணேசன், வழக்கறிஞர்கள், பரணி, சந்திரசேகரன் மற்றும் வாசு தேவன், ரங்கதுரை, சிங்காரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.