×

போதையில் மயங்கிய தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, டிச.12: ராயக்கோட்டை அருகே உள்ளுகுறுக்கை பகுதியை சேர்ந்தவர் அல்லபாகாஸ்(35). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை, மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்