ஊத்தங்கரை, டிச.12: ஊத்தங்கரை, கல்லாவி, தென்பெண்ணையாற்று பகுதி மற்றும் ஊத்தங்கரை- சேலம் சாலையில் நேற்று முன்தினம் மாலை, போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அதிக வேகமாக வந்த வகையில் 10 பேர், ெஹல்மெட் அணியாமல் வந்த 30 பேர், அதிக பாரமேற்றி வந்த 5 சரக்கு வாகனங்கள் மற்றும் போதையில் வந்த 5 பேர் என மொத்தம் 50 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்,’ என்றனர்.