×

புளுதியூர் சந்தையில் 33 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், டிச.12: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில், வாரந்தோறும் கடைகள் போடப்படுகிறது. இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், மாடு 16,800 முதல் 46,000  வரையும், ஆடு 4,500 முதல் 9,500வரையும் விற்பனையானது. இதில் மொத்தம் 33 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா