×

அரசனூரில் நாளை மின்தடை

சிவகங்கை, டிச. 12: அரசனூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை (டிச.13) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. சிவகங்கை அருகே அரசனூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி அரசனூர், இலுப்பக்குடி, திருமாஞ்சோலை, படமாத்தூர், கண்ணாரிருப்பு, கானூர், பச்சேரி, மைக்கேல்பட்டணம், பில்லூர், பெத்தனேந்தல், களத்தூர், ஏனாதி உட்பட இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இத்தகவல் துணை மின் நிலைய உதவி மின் பொறியாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா