×

ஆர்.எஸ்.மங்கலம் மெயின் ரோட்டில் மீன் விற்பனை

ஆர்.எஸ்.மங்கலம், டிச. 12: ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் ரோட்டில் மீன் வியாபாரம் செய்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தவிர்ப்பதற்கு புதிதாக மீன் மார்கெட் அமைத்து கொடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்று. இங்கு சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராமப் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கடற்கரை பகுதிகளான தேவிபட்டிணம், திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, காரங்காடு, முள்ளிமுனை போன்ற கிராமங்களில் உள்ள மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் இங்கு உள்ள பழைய பஸ்நிலையம் அருகில் ரோட்டின் ஒரத்தில் போட்டு வெட்ட வெளியில் மீன் வியாபாரம் செய்கின்றனர்.

இதனால் ஒரு சில நேரங்களில் வாகனங்களால் டிராபிக் ஆகிவிடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகின்றது. அவ்வப்போது பேரூராட்சியினரும், காவல் துறையும் இவர்களை அப்புறப்படுத்துகின்றனர். ஆனால் மீண்டும் மறுபடியும் அதே பகுதியில் வந்து விற்பனை செய்கின்றனர். அதே போல் இந்த ரோட்டில் விற்கப்படும் மீன்களால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரணம் ரோட்டில் உள்ள தூசிகள் மற்றும் வாகண புகைகள் இவை அனைத்தும் மீன்களில் படிகின்றது. அத்துடன் வெயிலில் மீன்கள் கிடப்பதால் நொந்து விரைவில் கெட்டு போய் விடும். இதனை சமைத்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘பேரூராட்சி நிர்வாகம் இவற்றை அப்புறப்படுத்துவதுடன் அவர்களுக்கு முறையான ஒரு இடத்தை தேர்வு செய்து புதிதாக ஒரு மீன் மார்க்கெட் அமைத்து கொடுத்து வியாபாரம் செய்ய அனுமதிக்கவும் வேண்டும். இதனால் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள், வாகன ஒட்டிகள் அனைவருக்கும் பயனளிக்கும்’ என்றார்.

Tags : RS Mangalam Main Road ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை