×

குடிநீர் முறையாக வழங்க கோரி சங்கரன்கோவிலில் நகராட்சி அலுவலகம் முற்றுகை

சங்கரன்கோவில், டிச. 12: முறையாக குடிநீர் வழங்க கோரி சங்கரன்கோவில் நகராட்சியை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.  சங்கரன்கோவில்  நகராட்சி 7வது வார்டுக்குட்பட்ட பகுதி லட்சுமியாபுரம் 7ம் தெரு. இங்கு 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 80 குடிநீர் இணைப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள்  கடந்த ஓராண்டில் இருமுறை நகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சிஐடியு  துணை செயலாளர் மாணிக்கம், தேமுதிக நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் இப்பகுதியை   சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 50 பேர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் நகராட்சி குடிநீர் வழங்கும் பிரிவில்  மனு அளித்தனர். மனுவைப் பெற்று கொண்ட  அலுவலகங்கள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து முற்றுகைகை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : office ,Sankarankoil ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...