×

டூவீலர் விபத்தில் பெண் பலி

கமுதி, டிச. 12: கமுதி தாலுகா, பெருநாழி அருகே முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி உமாபதி (54). இவருக்கு உடல் நிலை சரியில்லாததால்  தனது உறவினர் முத்துராமலிங்கம் என்பவருடன் டூவீலரில், விளாத்திகுளத்தில் உள்ள மருத்துவமணைக்கு சென்றார். எதிர்பாராத விதமாக டூவீலர் நிலை தடுமாறி விழுந்ததில், உமாபதி படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பெருநாழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags : accident ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!