தூத்துக்குடி, டிச. 12: தூத்துக்குடியில் மின்மாற்றி மீது காரை மோதியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்த பால்பாண்டி மகன் ஸ்டான்லி கமலேஷ் (22). இவர் நேற்று முன்தினம் காலை காரை ஓட்டி சென்றார். இதில் தூத்துக்குடி சத்திரம் பஸ் நிறுத்தம் அருகேயிருந்த மின்மாற்றி மீது இவரது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அதில் பொருத்தப்பட்டு இருந்த 2 மின்கம்பங்களும் உடைந்து சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரமும் தடைபட்டது. இதுகுறித்த மின்வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த மத்தியபாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.