×

உடன்குடியில் உருக்குலைந்த சாலையால் மக்கள் அவதி

உடன்குடி, டிச. 12:  உடன்குடியில் பராமரிப்பின்றி உருக்குலைந்த சாலையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.   உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட சிதம்பரத் தெருவில் எப்போதும் போக்குவரத்திற்கு பஞ்சமிராது. குறிப்பாக தசரா திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் உடன்குடி பஸ் நிலையம் செல்வதற்கு இச்சாலை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முறையாகப் பராமரிக்கப்படாததால் சேதமடைந்து வந்தது. உடன்குடி- பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் சிதம்பரத்தெரு பிரிவு பகுதியில் இருந்து உடன்குடி பஸ்நிலையம் வரை குண்டும், குழியுமாக மாறியதால் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் பெருக்கெடுக்கும் தண்ணீர் சாலையில் தேங்கிநிற்பதால் குளம் போல் காட்சி தருகிறது.  எனவே, உருக்குலைந்த சாலையால் தினமும் அவதிப்படும் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் முழுமையாக புதுப்பித்து அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED தாமதமாகும் தடுப்புக்கட்டை பணிகள்...