தூத்துக்குடி, டிச. 12: தூத்துக்குடியில் தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு என்.சி.சி. மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய பசுமைப்படையின் தமிழ்நாடு 3வது கப்பல்படை பிரிவு மற்றும் தமிழ்நாடு 29வது தரைப்படை பிரிவு சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இதில் என்.சி.சி. மாணவர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். முகாமை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கப்பல்படை என்.சி.சி. அதிகாரி டாக்டர் அசோக் துவக்கிவைத்தார். புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளி கப்பல்படை அதிகாரி கில்பர்ட் பர்னாண்டோ நன்றி கூறினார். ஏற்பாடுகளை தலைமை பயிற்றுவிப்பாளர் சக்திவேல் ஏற்பாடு செய்திருந்தார்.