கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குருதிகொடை

கோவில்பட்டி, டிச.12:  மகாகவி பாரதியார் பிறந்தநாளையொட்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ரத்த தானம் செய்தனர்.மகாகவி பாரதியார் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கோவில்பட்டி  அரசு மருத்துவமனையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ரத்த தான முகாம்  நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாள் கதிரவன் தலைமை வகித்தார்.   மக்கள் நீதிமய்யம் ரத்த தான குழு தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் பகுதி, தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என திரளானோர் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர்.  மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன் அனுமதியுடன் நடந்த இந்த ரத்த தான முகாமில்  மருத்துவமனை உறைவிட மருத்துவர் டாக்டர் பூவேஸ்வேரி, ரத்த வங்கி மருத்துவர்  தேவசேனா, டாக்டர்கள் வெங்கடேஷ், னிவாசன், செவிலியர்கள் சுபா,  ஜானகி மற்றும் அருணாசலம் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Related Stories: