வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஸ்காட் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் அருண் பாபு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் வரவேற்றுப் பேசுகையில் தற்போது படிக்கும் மாணவர்களின் மேம்பாட்டிற்காக கல்லூரி நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளை விளக்கினார். சென்னையில் பணியாற்றி வரும் பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது கல்லூரி கால நினைவுகளை நினைவுகூர்ந்தனர். இதே போல் பழைய மாணவர்களும் பலரும் பங்கேற்ற தங்களது அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். பேராசிரியர் ராமசாமி நன்றி கூறினார்.