நிலா சீ புட்ஸ் நிறுவனத்தில் காசநோய் மருத்துவ பரிசோதனை முகாம்

தூத்துக்குடி, டிச. 12:  தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் நிறுவனத்தில் காசநோய் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. தூத்துக்குடி  புதூர்பாண்டியாபுரத்தில் உள்ள நிலா சீ புட்ஸ் நிறுவனத்தில் காசநோய் இலவச  மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. சுகாதாரப் பணிகளுக்கான மாவட்ட இணை இயக்குநரான (காசநோய்) டாக்டர் சுந்தரலிங்கம், முகாமை துவக்கிவைத்துப் பேசினார். இதைத்தொடர்ந்து  டாக்டர் தங்கமணி, மாவட்ட சுகாதார மேற்பார்வையாளர் மதுரம் பிரைட்டன், டாக்டர்  சுதர்சன் மற்றும் மாவட்ட காசநோய் மருத்துவ குழுவினர்கள் மோகன்,  மாரியப்பன், ராய், சகாயராணி உள்ளிட்டோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ  பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.முகாமில் நிலா சீ புட்ஸ் குழுமத்தின்  நிர்வாக இயக்குநர் செல்வின்பிரபு, இயக்குநர் அமிநாத் பிரபு, பொது மேலாளர்  சோமன்ராய், தரக்கட்டுப்பாடு பிரிவு மேலாளர் சாந்தகுமார், மனிதவள மேலாளர்  ஜெயசீலன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: