×

வெள்ளச்சோளம் வெளஞ்சிருக்கு... ராஜபாளையம் அருகே புதர் மண்டிக் கிடக்கும் புதுக்குளம் கண்மாய்

ராஜபாளையம், டிச.12:  ராஜபாளையம் அருகே, புதுக்குளம் கண்மாய் புதர் மண்டிக் கிடக்கும் நிலையில், போதிய மழை பெய்தும் நீர்வரத்து இல்லாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழை பெய்தது. இதனால், ஒரு சில கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், பெரிய கண்மாய்களுக்கு போதிய நீர்வரத்து இல்லை. இதற்கு காரணம் நீர்வரத்து ஆற்றுப் பகுதிகளை தூர்வாராததே காரணமாகும். மேலும், புதுக்குளம் கண்மாயில் புதர்மண்டிக் கிடப்பதால், மழைநீர் தேங்கவில்லை. இதனால், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘குடிமராமத்து முறையில் கண்மாய்களை தூர்வார கோடிக் கணக்கான ரூபாய்களை ஒதுக்கியும், பல கண்மாய்கள் மற்ரும் வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. குடிமராமத்து மூலம் கண்மாய், வரத்துக் கால்வாய்களை தூர்வாரி இருந்தால், தற்போது பெய்த மழைக்கு அனைத்து நீர்நிலைகள் நிறைந்திருக்கும். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ராஜபாளையம் பகுதியில் போதிய மழை இல்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயப் பணிகளுக்கும், குடிநீருக்கும் அவதிப்பட்டனர். எனவே, ராஜபாளையம் பகுதியில் கண்மாய், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Pudukkulam ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!