மாவட்டம் உள்ளாட்சி தேர்தல் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 358 பேர் மனு

மதுரை, டிச.12: மதுரை மாவட்டத்தில் நேற்று மாவட்ட கவுன்சிலருக்கு ஒருவரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 15 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 358 பேரும், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 421 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 39 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 139 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். மூன்றாவது நாளான நேற்று நடந்த வேட்பு மனு தாக்கலில்  கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மதுரை மேற்கில் 2, உசிலம்பட்டியில் 8, திருப்பரங்குன்றம், மேலூர், கொட்டாம்பட்டி, சேடபட்டி, டி.கல்லுப்பட்டி ஆகிய ஒன்றியத்தில் தலா ஒன்று என மொத்தம் 15 பேர் மனு தாக்கல் செய்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மதுரை கிழக்கில் 43 பேரும், மதுரை மேற்கில் 23, திருப்பரங்குன்றத்தில் 41, மேலூரில் 29, கொட்டாம்பட்டியில் 12, வாடிப்பட்டியில் 6, அலங்காநல்லூரில் 28, உசிலம்பட்டியில் 33, செல்லம்பட்டியில் 23, சேடபட்டியில் 33, திருமங்கலத்தில் 31, டி.கல்லுப்பட்டியில் 29, கள்ளிக்குடியில் 25 என மொத்தம் 358 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதே போன்று இந்த கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 421 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில்  நேற்று வரை மொத்தம், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 17 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 397 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 560 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: