×

தேர்தல் ஆணையம் அறிவிப்பு சோழவந்தானில் புதிய சாலை பணிக்கு பூமி பூஜை

சோழவந்தான், டிச.12: சோழவந்தானில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளைப் பிள்ளையார் கோயில் அருகில் நேற்று நடைபெற்றது. எம்.எல்.ஏ மாணிக்கம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார். பேரூர் செயலாளர் கொரியர் கணேசன் வரவேற்றார். 2019-20 நகர்ப்புற சாலைகள் திட்டத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பேட்டை முதல் வடகரை கண்மாய் வரை 2 கி.மீ தூரம் இச்சாலை பணிகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் முனியசாமி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் மணிமாறன், செயல் அலுவலர் ஜீலான்பானு, உதவி பொறியாளர் வள்ளி, பணி மேற்பார்வையாளர் கருப்பையா, பேரூராட்சி பணியாளர்கள் சிவக்குமார், கல்யாண சுந்தரம், சோணை, சதீஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Bhoomi Pooja ,Election Commission ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...