ஒரு கிலோ கஞ்சா 2 பேர் கைது

வாடிப்பட்டி, டிச.12: சமயநல்லூர் காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் பரவை மெயின் ரோட்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்து சோதனை செய்தனர். அதில் இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனைக்காக நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பரவை கிராமத்தை சேர்ந்த துரைபாண்டி(41), திண்டுக்கல் மாவட்டம் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்வம்(39) உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: