திருமங்கலம் ராயபாளையத்தில் கும்பாபிஷேகம்

திருமங்கலம், டிச.12: திருமங்கலம் ராயபாளையம் சத்யயுக சிருஷ்டி கோயிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமங்கலம் அடுத்துள்ள ராயபாளையம் முக்திநிலையத்தில் அமைந்துள்ள சத்யயுக சிருஷ்டி கோயில் வளாகத்தில் 127 கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோயில்களுக்கு 7 கட்டங்களாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்டமான கும்பாபிஷேகங்கள் நிறைவடைந்துள்ளன. நேற்று மூன்றாம்கட்டமாக சீதாராமர் கோயில், ராதாகிருஷ்ணன் கோயில், ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில் ஆகிய ஆலயங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. வசந்தசாய் முன்னிலையில் ஸ்ரீ யோகானத் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பரஞ்ஜோதி ஆசிரமம் தலைவர் திருமலை பரஞ்ஜோதி, துறவிகள் மற்றும் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சத்யயுக சிருஷ்டி கோயில் நிர்வாக அறங்காவலர் வெங்கட்ராமன் செய்திருந்தார். கும்பாபிஷேகத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: