இன்னைக்கு செம விருந்துதான்... 17 பேர் பலி சம்பவம்; கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச.12: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நீதி கேட்டு போராடிய தமிழ்புலிகள் கட்சித் தலைவர்  நாகை. திருவள்ளுவன் கைது செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்யக்கோரி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் கிங் சுந்தரம் தலைமை வகித்தார்.

மூவேந்தர் புலிப்படை நிறுவனர் தலைவர் பாஸ்கர், மருதநாட்டு வேங்கை நிறுவனர் தலைவர் ராஜ்குமார், தமிழர் தேசிய கழக தலைவர் வையவன் ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் தலைவர் முருகவேல்ராஜன், மருதம் மக்கள் கழக நிர்வாகி சரவணப்பாண்டியன் மற்றும் தமிழர் விடுதலை களம் நிறுவனர் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். சுமார் 50 பேர் கலந்து கொண்டு, கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: