குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து பழநியில் நகல் எரிப்பு போராட்டம்

பழநி, டிச. 12: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து பழநியில் எஸ்டிபிஐ கட்சியினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததை கண்டித்து பழநியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கைசர் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சதாம் உசேன் வரவேற்று பேசினார். போராட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் முபாரக் அலி, பழநி டவுன் முஸ்லீம் தர்ம பரிபாலன சங்க துணை தலைவர் கைசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: