×

திண்டுக்கல் அருகே வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலை

திண்டுக்கல், டிச. 12: திண்டுக்கல் அருகே வீட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி, ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் பழனிவேல் ராஜ் (36). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (34). இவரும் எரியோடு அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டை பூட்டி விட்டு ஒரு விசேஷத்திற்கு சென்று வந்துள்ளனர். அப்போது வீட்டின் கேட், கதவு உடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து பழனிவேல் ராஜ் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : house ,jewelery ,theft ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்