×

வத்தலக்குண்டு கணவாய்பட்டியில் சாரண, சாரணியர் பொதுக்குழு கூட்டம்

வத்தலக்குண்டு, டிச. 12: வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சிபிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, கொடைக்கானல், ஆத்தூர் ஒன்றியங்களை அடக்கிய வத்தலக்குண்டு கல்வி மாவட்ட பாரத சாரண- சாரணியர் இயக்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இயக்க மாவட்ட தலைவரும், லயன்ஸ் முன்னாள் ஆளுநருமான தங்கராஜ் தலைமை வகித்தார். இயக்க மாவட்ட முதன்மை ஆணையரும், மாவட்ட கல்வி அலுவலருமான திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இயக்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து பள்ளி தலைவர் தங்கமுத்து, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாளாளரும், இயக்க மாவட்ட துணை தலைவருமான கயல்விழி, மாவட்ட சாரணர் ஆணையர் பிரசன்னா, மாவட்ட சாரணியர் ஆணையர் மலர்விழி, அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தோமையா பால்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து இயக்கத்தின் நீண்ட கால சேவைக்கான மாநில விருது பெற்ற சண்முகநாச்சியார், அகிலாதேவி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி செயலர் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கினார். இதில் பிரான்ஸ் நாட்டு பெண்கள் மரியோன், பாபத், இயக்க நிர்வாகிகள் சதீஸ்குமார், ரேணுகா பரிமளம், பாண்டியம்மாள், முனியாண்டி, ராஜன், மகாவிஷ்ணு, வட்டார கல்வி அலுவலர்கள் எஸ்தர், விஜயா, அங்கையர்கன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர். இணை செயலாளர் அருணா நன்றி கூறினார்.

Tags : Scout General Meeting ,Wattalakundu ,
× RELATED வத்தலக்குண்டுவில் சாலையின்...