பழநியில் பாரதியார் பிறந்தநாள் விழா

பழநி, டிச. 12: பழநியில் தமிழ்நாடு பிரமாணர் சங்கத்தின் சார்பில் பாரதியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் கண்பத் கிராண்ட் ஹரிஹரிமுத்து தலைமை வகித்தார். மாநில செயலாளர் அனிருத் முன்னிலை வகித்தார். விழாவில் பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாநில ஆலோசகர் வைத்தியநாதன், மாநில நிர்வாகி ரமேஷ், இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பழநி முத்தமிழ் பயிலகத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பயிலக முதல்வர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். விழாவில் பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ெதாடர்ந்து பாரதியாரின் பாடல்கள் மாணவ- மாணவிகளால் பாடப்பட்டன. பின்னர் பாரதி கண்ட சமூகம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: