×

துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு முத்துப்பேட்டை சாலையில் தாழ்வான மின்கம்பியை உயர்த்தி கட்ட கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, டிச.12:முத்துப்பேட்டை சாலையில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியை உயர்த்தி கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி நகராட்சி முத்துப்பேட்டை சாலையில் அமைந்துள்ள அம்பேத்கார் சிலை திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய சிலையாகும். நாள்தோறும் மரியாதை செலுத்தும் விதமாக பல்வேறு தரப்பினர் வந்து செல்கின்றனர். அம்பேத்கார் சிலையின் கூரைப்ப குதி கடந்த கஜா புயலினால் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.

இரும்பு கம்பிகள் மட்டுமே உள்ளது. மேல்புறம் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக இருப்பதால் காற்றின் வேகத்தில் இரும்புக் கம்பிகளில் பட்டு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ எனஅச்சம் உள்ளது. இதுகுறித்து பல்வேறு மனுக்கள் திருத்துறைப்பூண்டி மின் வாரிய அலுவலகத்திற்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மக்கள் நலன் கருதி தாழ்வாக தொங்கும் மின்கம்பியை உயர்த்தி கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : road ,Parappuram Muthupettai ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி