×

மன்னார்குடி அருகே 2 கூரை வீடுகளில் பயங்கர தீ விபத்து

மன்னார்குடி, டிச. 12:மன்னார்குடி அருகே இரண்டு வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை அம்பேத்கர் நகரில் வசிப்பவர் சத்தீஸ்வரி (21). இவர் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் இ சேவை மையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது பெற்றோர் செல்வம், தமிழ்ச்செல்வி ஆகியோர் இறந்த நிலையில் யோகேஸ்வரி (19), கீர்த்திகா (18) இரண்டு சகோதரிகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சத்தீஸ்வரி நேற்று முன்தினம் இரவு தனது இரு சகோதரி களுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்தது. இதனை கண்ட அருகில் இருந்த வர்கள் தீயை அணைக்க முயன்றனர். தீ மளமளவென்று கொழுந்து விட்டு எரிந்ததில் அருகில் இருந்த ராஜேந்திரன் (40) என்பவருக்கு சொந்தமான வீட்டி ற்கும் தீ பரவியது.

தகவல் அறிந்து வந்த மன்னார்குடி தீயணைப்பு தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் தீயை அணைக்க போராடினர். அதற்குள் சத்தீஸ்வரியின் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. மற்றொரு வீடு பாதி எரிந்த நிலையில் தீ அணைக்கப்பட்டது. இதில் சத்தீஸ்வரியின் வீட்டில் இருந்த டூவீலர், 2 லேப்டாப், ரொக்க பணம் ரூ.25 ஆயிரம், 2 பவுன் தங்க நகை, பீரோ மற்றும் அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின. தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. சம்பவ இடத்தை பார்வையிட்ட மன்னார்குடி போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : houses ,Mannargudi ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்