ஈரோடு, டிச.12: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உருண்டை வெல்லம், நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. வெல்லம் தயாரிப்பதற்காக சத்தி, கோபி, பவானி, கவுந்தப்பாடி, பங்களாபுதூர், அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் ஆலைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆலைகளில், கரும்புகளை சாறு பிளிந்து கொப்பரையில் பாவு உற்பத்தி செய்து, நாட்டு சர்க்கரையாகவும், உருண்டை வெல்லமாகவும் தயாரிக்கின்றனர். உருண்டை வெல்லத்தை 30 கிலோ மூட்டையாக எடை வைத்து, சந்தைக்கு அனுப்புகின்றனர். அங்கு ஏலம் மூலம் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.மேலும், பெரும்பாலான வியாபாரிகள் நேரடியாக ஆலைகளுக்கு வந்து வெல்லம் வாங்கிச் செல்கின்றனர். ஈரோட்டில் தயாரிக்கப்படும் வெல்லம் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தில் ஜன.15ம் தேதி பொங்கல் பண்டிகை என்பதால் மக்கள் பொங்கல் வைக்க வெல்லத்தை அதிகமாக பயன்படுத்துவார்கள். இதனால், ஈரோடு மாவட்டத்தில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு சில வியாபாரிகள் கரும்பாலைகளுக்கு நேரடியாக சென்று இப்போதே வெல்லங்களை கொள்முதல் செய்ய துவங்கி விட்டனர்.
இதுகுறித்து முள்ளாம்பரப்பில் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர் கூறியதாவது: