விநாயகர், குப்பியண்ணன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் ரூ.1.45 லட்சம் காணிக்கை

ஈரோடு, டிச.12:  ஈரோடு சக்தி விநாயகர் மற்றும் குப்பியண்ணன் கோயில் உண்டியல்களில் ரூ.1.45 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆருத்ரகபாலீஸ்வரர் கோயில் வகையறாவை சேர்ந்த சக்திவிநாயகர் கோயில் முனிசிபல் காலனியில் உள்ளது. இந்த கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் 3 மாதத்துக்கு ஒருமுறை எண்ணப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் கோயிலில் வைக்கப்பட்டுள்ள மூன்று உண்டியல்களும் அறநிலையத்துறை ஆய்வாளர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், ரூ.87,857 பக்தர்கள் காணிக்கையாக  செலுத்தியிருந்தனர். இதேபோல், மொடக்குறிச்சி அருகே வேலம்பாளையத்தில் உள்ள குப்பியண்ணன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் எண்ணப்பட்டதில்,  ரூ.57,636 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  இரு கோயில் உண்டியல்களிலும், ஒரு லட்சத்து 45ஆயிரத்து 493 ரூபாயை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: