×

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தல்

ஈரோடு, டிச.12: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என ஈரோட்டில் திக தெருமுனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே திராவிட கழக தலைவர் வீரமணியின் 87ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நேற்று மாலை தெருமுனை கூட்டம் நடந்தது.  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் ராம்கண் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் காமராஜ், மாவட்ட துணை செயலாளர் மணி மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், தலைமைக்கழக பேச்சாளர் யாழ் ஸ்டிபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி திட்டத்தினை மத்திய அரசு கைவிட வேண்டும். கல்வியை மத்திய அரசு பட்டியலிருந்து தமிழக அரசின் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற பொருளாதார இட ஒதுக்கீட்டை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags :
× RELATED காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள்...