கும்பகோணம், டிச. 12: கும்பகோணம் பைராகித்தோப்பு மக்களுக்காக அய்யப்பன் நகரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனை மற்றும் பட்டாவை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத்தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தனி தாசில்தாரிடம் பைராகித்தோப்பு மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கும்பகோணம் பைராகித்தோப்பில் 60 ஆண்டுகளாக வீடுகளில் வாடகைக்கும், ஒத்திகைக்கும் வசித்து வருகிறோம். எங்களுக்காக ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 1983ம் ஆண்டு 36 குடும்பங்களுக்கு அய்யப்பன் நகரில் இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினர். இந்த வீட்டுமனை பட்டாவை பெருமாண்டியை சேர்ந்த ஒருவர், தன்னை எஸ்சிஎஸ்டி அமைப்பின் அகில இந்திய தலைவர் என்று கூறி எங்களிடமிருந்த பட்டாவை வாங்கி வைத்து கொண்டு அரசு சார்பில் இலவசமாக வீடு கட்டி கொடுக்கிறேன் என்றார்.