கோவை,டிச.12: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்கள் 312 பேருக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் தொடர்பான பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சு திறனை மேம்படுத்தவும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்திற்கு 90 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 45 நிமிடங்கள் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி அளிக்கும் வகையில் முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.