அரசு கலைக்கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

கோவை, டிச.12: கோவை அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில் போதை பழக்கம் ஒழிப்பு தொடர்பான மனித சங்கிலி விழிப்புணர்வு நேற்று நடந்தது.  பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் மாணவர்களிடம் போதை பழக்கத்தை ஒழிக்கும் வகையில் கோவை அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சார்பில் கல்லூரி வளாகத்தில் மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  கல்லூரியின் முதல்வர் (பொ) எழிலி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலகு 3ன் திட்ட அலுவலர் மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில், போதை உன்னை மெல்ல கொல்லும், போதை சுடுகாட்டிற்கு செல்லும் பாதை உள்ளிட்ட வாசகங்கள் எழுதி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Related Stories: